பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் "பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. இந்த வழக்கில் போதுமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான சிவில் வழக்கில் ஏற்கனேவே இந்துக்கள் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்து அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கிரிமினல் வழக்கில் விசாரணை செய்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்தத் தீா்ப்புக் குறித்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி யில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் திகதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலிஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிஐ-யிடம் ஒப்படைக் கப்பட்டது.
இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம்சாட்டப் பட்டது. அவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. மொத்தம் 45 முதல் தகவல் அறிக்கைகள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்துவிட்டனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய 32 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் தினந் தோறும் விசாரணை நடந்து வந்தது. மொத் தம் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இறுதியாக, அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகினர். இம் மாத தொடக்கத்தில் விசாரணை நிறை வடைந்தது. இதையடுத்து தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. லக்னோ சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழ்கியுள்ளது..